ஏர்வாடியில் பள்ளி மாணவர்கள் மோதல்: அரிவாளால் வெட்டப்பட்டதில் இருவர் காயம்

3 months ago 4
ARTICLE AD BOX

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே பள்ளி மாணவர்கள் இருவரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

ஏர்வாடி அருகே டோனாவூர் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் வடுகச்சிமதில் பகுதியைச் சேர்ந்த மாணவனுக்கும், மேலச்செவல் பகுதியைச் சேர்ந்த மாணவனுக்கும் நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டுள்ளது. குடும்பம் குறித்து இருவரும் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக பேசியதால் இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் தெரியவந்ததும் வகுப்பு ஆசிரியர் இருவரையும் அழைத்து அறிவுரை கூறியதோடு சமாதானமாக செல்ல வலியுறுத்தியுள்ளார்.

Read Entire Article