ARTICLE AD BOX

கரோனா தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் பந்தின் மீது உமிழ்நீரைத் தடவி பிறகு காற்சட்டையில் தேய்த்து பளபளப்பைத் தக்க வைப்பது தடை செய்யப்பட்டிருந்தது. இப்போது ஐபிஎல் போட்டிகளுக்காக அந்தத் தடை நீக்கப்பட்டு உமிழ்நீரைப் பயன்படுத்தலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு முதன் முதலாகக் கரோனா காலகட்டத்தில், பந்து வீச்சாளர்கள் பந்தில் உமிழ்நீரை பயன்படுத்த ஐசிசி தடை விதித்தது. ஐசிசிக்கு ஒரு விதி என்றால் ஐபிஎல்-க்கு ஒரு விதி என்பது வழக்கமாகிப் போன நிலையில் ஐபிஎல்-க்காக விதிமுறை தளர்த்தப்பட்டு மீண்டும் பந்தின் பளபளப்பைத் தக்கவைக்க உமிழ்நீரை பயன்படுத்தலாம் என்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

9 months ago
8







English (US) ·