ஐபிஎல் ஆன்லைன் சூதாட்டம்: கோவையில் 7 பேர் கைது; ரூ.1.09 கோடி ரொக்கம் பறிமுதல்

8 months ago 8
ARTICLE AD BOX

கோவை: கோவையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை மையப்படுத்தி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.09 கோடி பணம், 2 கார்கள், 2 இருசக்கர வாகனங்கள், 12 செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கோவை ராம்நகர் பகுதியில் உள்ள ஒரு வீ்ட்டை மையப்படுத்தி, ஒரு கும்பல் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், காவல் ஆணையரின் தனிப்படை போலீஸார், நேற்று ராம்நகர் பகுதியில் தகவல் கிடைத்த வீட்டுக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அந்த வீட்டில் 7 பேர் கொண்ட கும்பல் இருந்தனர். அவர்களைப் பிடித்து போலீஸார் விசாரித்த போது, அவர்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை மையப்படு்த்தி, ஆன்லைன் வாயிலாக சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

Read Entire Article