ARTICLE AD BOX

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆல்ரவுண்டர் அஸ்வின் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் உலக அளவில் நடைபெறும் பிற டி20 ஃப்ரான்சைஸ் லீக் தொடர்களில் விளையாட தனது ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
தனது ஐபிஎல் ஓய்வு அறிவிப்பை சமூக வலைதள பதிவு மூலம் அஸ்வின் பகிர்ந்தார். கடந்த ஆண்டு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 38 வயதான அவர் கடந்த 2009-ல் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பிறகே 2010-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

4 months ago
6







English (US) ·