ARTICLE AD BOX

கோவை: கோவையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்து, பணம், சொகுசு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் கும்பலைப் பிடிக்க மாநகர காவல் ஆணையரின் தனிப்படை போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை தனிப்படை போலீஸார் பிடித்தனர். இந்நிலையில், சொக்கம்புதூர் அருகே, ஒருவர் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதை தனிப்படை போலீஸார் கண்டறிந்து இன்று அவரைப் பிடித்தனர்.

7 months ago
8







English (US) ·