ARTICLE AD BOX

ஓசூர்: தொழில் நகரான ஓசூர் கர்நாடக மற்றும் ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. இங்குள்ள தொழிற்சாலைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணிபுரி்ந்து வருகின்றனர்.
மேலும், பெங்களூரு ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பலரும் ஓசூரில் வாடகை வீடுகளில் தங்கி தினசரி பெங்களூருக்குச் சென்று வருகின்றனர். இருமாநில எல்லையில் ஓசூர் உள்ளதால், குற்றங்களில் ஈடுபடுவோர் எளிதாக அண்டை மாநிலங்களுக்குத் தப்பிச் செல்கின்றனர். இதனால், குற்றங்களில் ஈடுபடுவோரைப் பிடிப்பது காவல் துறைக்குச் சவாலாக இருந்து வருகிறது.

4 months ago
6







English (US) ·