ARTICLE AD BOX

ஓசூர்: ஓசூர் அருகே அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதிய விபத்தில் கனடாவில் இருந்து தலை தீபாவளி கொண்டாட வந்தவர் உள்ளிட்ட 4 நண்பர்கள் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கோபசந்திரம் அருகே நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற சரக்கு வாகனம், 2 லாரிகள், கார் என 4 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன.
இதனால், இச்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு நின்ற காரின் பின்னால், வேகமாக வந்த லாரி மோதியது. இதில் கார் அப்பளம்போல நொறுங்கியதில், காரில் இருந்த 4 இளைஞர்கள் உயிரிழந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த அட்கோ போலீஸார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 months ago
4







English (US) ·