ஓசூர் | ஆதரவற்றோர் காப்பகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: விடுதி காப்பாளர் உட்பட 5 பேர் கைது

3 months ago 5
ARTICLE AD BOX

ஓசூர்: ஓசூரில் ஆதரவற்றோர் காப்பகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காப்பாளர் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். ஓசூரில் இயங்கிவரும் ஆதர​வற்​றோர் காப்​பகத்​தில் மாணவ, மாணவி​கள் 33 பேர் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இங்கு 9 வயது மாணவிக்கு ஒரு வாரத்​துக்கு முன்​னர் உடல்​நலம் பாதிக்கப்​பட்​டது.

இதையடுத்​து, மருத்​து​வமனைக்கு சிகிச்​சைக்கு அழைத்​துச் சென்​ற​போது, மாணவி பாலியல் தொல்​லை​யால் பாதிக்​கப்​பட்​டிருப்​பது தெரிந்​தது. தகவல் அறிந்து கிருஷ்ணகிரி மாவட்ட குழந்​தைகள் நல பாதுகாப்பு குழு​வினர் விசா​ரணை நடத்தினர். இதில், மாணவி பாலியல் துன்புறுத்​தலுக்கு ஆளானது உறுதி செய்​யப்​பட்​டது.

Read Entire Article