ஓய்வுபெற்ற எஸ்.ஐ கொலை சம்பவம்: நெல்லை டவுன் முன்னாள் உதவி காவல் ஆணையர் சஸ்பெண்ட்

9 months ago 9
ARTICLE AD BOX

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் டவுன் காவல் முன்னாள் உதவி ஆணையர் செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி (60). திருநெல்வேலியில் 18-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்ட கார்த்திக், அக்பர்ஷா ஆகிய இருவர் திருநெல்வேலி நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த முகமது தவுபிக் என்ற கிருஷ்ணமூர்த்தியை போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி புதன்கிழமை கைது செய்தனர்.

Read Entire Article