கடன் வாங்கி விவசாயம் செய்ததால் நஷ்டம்: செங்குன்றத்தில் விவசாயி தற்கொலை

9 months ago 8
ARTICLE AD BOX

திருவள்ளூர்: செங்குன்றம், காட்டூரை அடுத்த வேலூர் கிராமம், மேட்டு தெருவில் வசித்து வந்தவர் முத்துராஜ் (65). இவர் தனக்கு சொந்தமான நிலத் தில் விவசாயம் செய்து வந்தார். இவர், விவசாயத்துக்கு கடன் வாங்கி செலவு செய்து வந்ததாகவும் இதில் நஷ்டம் ஏற்பட்டதில் மனவருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று அதி காலை மனைவியிடம் கழிப்பறைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் குளியல் அறையில் தனது மனைவியின் புடவையால் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மனைவி சுசிலா, கணவர் சென்று நீண்ட நேரம் ஆகியதால் குளியலறை சென்று பார்த்தபோது, கணவர் தூக்கு மாட் டிக் கொண்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Read Entire Article