ARTICLE AD BOX

கடலூர்: கடலூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே உள்ள எம். புதூரை சேர்ந்தவர் நேரு (60). இவர் அதிமுக கிளை கழகச் செயலாளர். இந்நிலையில், இவர் இன்று (ஏப்.21) காலை அவரது முந்திரி தோப்பில், முந்திரி கொட்டைகள் பொறுக்குவதற்காக நாகிய நத்தம் பகுதியை சேர்ந்த சரண்யா (25), கல்பனா (25), ஆகியோரை அவரது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு ராமாபுரம் அருகே உள்ள விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

8 months ago
8







English (US) ·