ARTICLE AD BOX

கடலூர்: கடலூர் அருகே லாரி ஓட்டுநர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த புதுச்சேரி ரவுடி விஜய் என்பவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். வழிப்பறிச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லாரி டிரைவர்களிடம் தொடர் வழிப்பறி: கடலூர் அருகே உள்ள ஆணையம் பேட்டை தனியார் ஓட்டலின் அருகே, விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இன்று (ஏப்.2) அதிகாலை 3 மணி அளவில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த பிரபு (43), திண்டிவனத்தில் இருந்து கருங்கல் ஜல்லி ஏற்றி வந்த லாரியை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார். அப்போது இரண்டு பைக்குகளில் வந்த ஆறு பேர், லாரி ஓட்டுநர் பிரபுவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.3 ஆயிரம் பணம், டார்ச் லைட் மற்றும் செல்போனை பிடுங்கிக் கொண்டு, அவரை தக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

8 months ago
8







English (US) ·