ARTICLE AD BOX

கராச்சி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் புதன்கிழமை (பிப்.19) பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இந்நிலையில், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நாட்டின் கொடியை தவிர்த்து தொடரில் பங்கேற்கும் மற்ற 7 நாடுகளின் கொடிகள் பறக்கவிடப்பட்ட வீடியோ ஒரு சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ‘பாகிஸ்தான் வேண்டுமென்றே இதை செய்துள்ளது’ என கூறியுள்ளனர். பாகிஸ்தானில் நடைபெறும் இந்த தொடரில் இந்திய வீரர்கள் பாதுகாப்பு காரணமாக அங்கு பங்கேற்று விளையாட முடியவில்லை. அதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) உறுதி செய்துள்ளன.

10 months ago
9







English (US) ·