ARTICLE AD BOX

கரூர்: அரசுப் பேருந்தில் கடத்தி செல்லப்பட்ட ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை விற்பனைக்காக வாங்கி சேலத்தில் இருந்து கரூர் வழியாக மதுரைக்கு அரசுப் பேருந்தில் கொண்டு செல்லப்படுவதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லாவிற்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் திருகாம்புலியூர் ரவுண்டானா அருகேயுள்ள சர்வீஸ் சாலையில் கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அகிலன் தலைமையில் தனிப்படையினர் குறிப்பிட்ட அரசுப் பேருந்தில் சோதனையிட்டனர்.

9 months ago
9







English (US) ·