ARTICLE AD BOX

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் ஓட்டுநர் என 5 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தை ஆட்சியர் மீ.தங்கவேல், காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் பார்வையிட்டனர்.
கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டம் குளித்தலை புறவழிச்சாலையில் தனியார் பள்ளி அருகே இன்று (பிப். 26ம் தேதி) அதிகாலை 2.15 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தும் கோவையில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

10 months ago
9







English (US) ·