கள்ளநோட்டு அச்சடித்த சம்பவம்: விசிகவினர் 4 பேர் கைது

8 months ago 8
ARTICLE AD BOX

கடலூர்: திட்டக்குடி அருகே கள்ளநோட்டு அச்சடித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இந்த வழக்கில் இருவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (39), விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொருளாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவர், தனது வயல்வெளியில் கொட்டகை அமைத்து கள்ளநோட்டு அச்சடித்ததாக நேற்று ராமநத்தம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 2 பேரைக் கைது செய்தனர். ஆனால், செல்வம் தப்பியோடினார். இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கி மாவட்டச் செயலாளர் உத்தரவிட்டார்.

Read Entire Article