ARTICLE AD BOX

நாகர்கோவில்: அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ உட்பட 3 பேருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டது.
குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ராஜேஷ்குமார். இவர் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராகவும் உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு குமரி மாவட்டம் மேல்மிடாலம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ஜோசப், பால்துரை, அவரது மனைவி சுபிதா ஆகியோர் அரசு புறம்போக்கு நில பகுதியோடு ஒட்டியிருந்த தங்களது நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டியுள்ளனர். இதில் அரசு புறம்போக்கு நிலமும் அபகரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய வருவாய் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் நிலத்தை அளவீடு செய்தபோது ஜோசப், பால்துரை, சுபிதா மற்றும் உறவினர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

8 months ago
8







English (US) ·