ARTICLE AD BOX

திருப்பூர்: திருப்பூரில் நகை வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி ரூ.1.10 கோடி கொள்ளையடித்த கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரூர் கீழநஞ்சைய தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (60). நகை வியாபாரியான இவர், ரயில் மற்றும் விமான டிக்கெட் எடுத்து கொடுக்கும் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவர் அவ்வப்போது கோவைக்கு காரில் வந்து நகை வாங்கிக்கொண்டு கரூர் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று (மார்ச் 4) மாலை இதுபோன்று கரூரில் இருந்து காரில் கோவைக்கு நகை வாங்க தனது டிரைவர் ஜோதியுடன் (60) வந்துள்ளார்.

9 months ago
9







English (US) ·