காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியை நாட்டு வெடிகுண்டு வீசிக் கொன்ற கும்பல் தப்பியோட்டம்! 

9 months ago 8
ARTICLE AD BOX

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கொலை, கொள்ளை, செம்மரக்கடத்தல் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ‘வசூல் ராஜா’ நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் இவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

காஞ்சிபுரம் திருக்காளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வசூல் ராஜா (38). இவர் மீது கடந்த 10 ஆண்டுகளில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, செம்மரக்கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் திருக்காளிமேடு பகுதியில் வணிகம் செய்பவர்களிடம் அவ்வப்போது மிரட்டி பணம் பறித்து வந்தார். சிறையில் இருந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியில் வந்துள்ளார்.

Read Entire Article