காஞ்சிபுரம் | நண்பரை கொலை செய்த வழக்கில் டி.வி. சீரியல் துணை இயக்குநருக்கு ஆயுள்

2 months ago 4
ARTICLE AD BOX

காஞ்சிபுரம்: ​மாங்​காடு பகு​தி​யில் புத்​தாண்டு கொண்​டாட்​டத்​தின் போது ஏற்​பட்ட மோதலில், நண்​பரை கொலை செய்த டி.​வி. சீரியல் துணை இயக்​குநருக்கு ஆயுள் தண்​டனை விதித்து காஞ்​சிபுரம் நீதி​மன்​றம் தீ்ர்ப்​பளித்​துள்​ளது. சென்னை அருகே உள்ள அய்​யப்​பன்​தாங்​கல் பகு​தி​யைச் சேர்ந்த சீரியல் துணை இயக்​குநர் மணி​கண்​டன். இவர், 2021 புத்​தாண்டு தினத்​தன்​று, தனது நண்​பர்​களான ருத்​ரன், ராம்குமார், உள்ளிட்டோருடன் வீட்​டில் மதுஅருந்திகொண்​டாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, மணி​கண்​ட​னுக்​கும், ருத்​ரனுக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டு, அது கைகலப்​பாக மாறியது. ருத்​ரன் தாக்​கிய​தில் காயமடைந்த மணி​கண்​டன், ஆத்​திரத்​தில் சமையலறைக்​குச் சென்று கத்​தியை எடுத்து வந்​து, ருத்​ரனின் மார்​பில் குத்​தி​னார். இதில் அவர் உயி​ரிழந்​தார்.

Read Entire Article