காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான வெள்ளி கட்டிகள் திருடிய 7 பேர் கைது

8 months ago 8
ARTICLE AD BOX

திருவள்ளூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூரில் தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இந்த தனியார் நிறுவனத்துக்கு லண்டனில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து வர வேண்டிய 39 டன் எடை கொண்ட 1,305 வெள்ளி பார்கள், 2 கன்டெய்னர்களில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே காட்டுப் பள்ளியில் உள்ள தனியார் துறைமுகத்துக்கு கடந்த மாதம் 30ம் தேதி வந்தடைந்தது. அந்த வெள்ளி பார்கள், சென் னை. தண்டையார் பேட்டையில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறு வனம் மூலம் 2 கன்டெய்னர் லாரிகள் மூலம் கடந்த 3ம் தேதி மண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வந்தது.

அப்போது. நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மேற்கொண்ட சோதனையில், 1,305 வெள்ளி பார்களில், ரூ. 8.96 கோடி மதிப்புள்ள, 922 கிலோ எடை கொண்ட 30 வெள்ளி பார்கள் மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்து. தனியார் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கின் அதிகாரியான தாசரி ஸ்ரீஹரி ராவ் அளித்த புகாரின் அடிப்படையில், காட்டூர் போலீஸார் விசாரணை செய்தனர்.

Read Entire Article