காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை: 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

8 months ago 8
ARTICLE AD BOX

திருநெல்வேலி: காதல் விவகாரத்தில் இளைஞரை கொலை செய்தது தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். திருநெல்வேலி டவுனில் இருந்து ராமையன்பட்டி செல்லும் சாலையில் குருநாதன்கோவில் விலக்கு அருகே நேற்று முன்தினம் இரவு சாலையோரத்தில் ரத்தம் உறைந்து கிடந்தது. தகவலறிந்து வந்த போலீஸார் விசாரணை நடத்தியதில், அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் 3 பேர் போதையில் சண்டையிட்டது தெரியவந்தது.

இதற்கிடையில், காவல் கட்டுப்பாட்டு அறையை நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒருவர், குருநாதன்கோவில் விலக்கு அருகேயுள்ள சுடுகாட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, காவல் துணை ஆணையர்கள் கீதா, வினோத் சாந்தாராம் மற்றும் போலீஸார் அங்கு சென்று, தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

Read Entire Article