ARTICLE AD BOX

சென்னை: காதல் விவகாரத்தில் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை கூவம் ஆற்றில் வீசிச் சென்ற சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை மேத்தா நகர் பாலத்தின் கீழே கூவம் ஆற்றில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் சடலம் கிடப்பதாக சேத்துப்பட்டு போலீஸாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. உடனே விரைந்து சென்ற போலீஸார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில் அந்த இளைஞர் கொளத்தூரை சேர்ந்த சாய்நாத்(24) என்பதும், அவர் கொலை செய்யப்பட்டு இறந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில் சாய்நாத்தை கொலை செய்தது, செனாய் நகரைச் சேர்ந்த அன்பரசன்(18) மற்றும் அவரது நண்பர்கள் பரத்(20) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

3 months ago
4







English (US) ·