காதல் விவகாரத்தில் கொளத்தூர் இளைஞர் கொலை: உடலை கூவத்தில் வீசிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

3 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: ​காதல் விவ​காரத்​தில் இளைஞரை கத்​தி​யால் குத்தி கொலை செய்து உடலை கூவம் ஆற்​றில் வீசிச் சென்ற சிறு​வன் உள்ளிட்ட 3 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். சென்னை மேத்தா நகர் பாலத்​தின் கீழே கூவம் ஆற்​றில் 25 வயது மதிக்​கத்​தக்க இளைஞர் சடலம் கிடப்​ப​தாக சேத்​துப்​பட்டு போலீ​ஸாருக்கு நேற்று முன்​தினம் தகவல் கிடைத்​தது. உடனே விரைந்து சென்ற போலீ​ஸார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காக கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர்.

விசா​ரணை​யில் அந்த இளைஞர் கொளத்​தூரை சேர்ந்த சாய்​நாத்​(24) என்​பதும், அவர் கொலை செய்​யப்​பட்டு இறந்​திருப்​பதும் தெரிய​வந்​தது. இதையடுத்து அப்​பகு​தி​யில் பொருத்​தப்​பட்​டிருந்த கண்​காணிப்பு கேம​ரா​வில் பதி​வான காட்​சிகளை வைத்து விசா​ரணை நடத்​தினர். அதில் சாய்​நாத்தை கொலை செய்​தது, செனாய் நகரைச் சேர்ந்த அன்​பரசன்​(18) மற்​றும் அவரது நண்​பர்​கள் பரத்​(20) மற்​றும் 17 வயது சிறு​வன் என்​பது தெரிய​வந்​தது.

Read Entire Article