ARTICLE AD BOX

கான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் அமைந்துள்ள ஆசிரமம் ஒன்றில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக ‘டேக்வாண்டோ’ வீராங்கனை குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது தொடர்பான புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட வீராங்கனை கான்பூரின் கோவிந்த் நகரை சேர்ந்தவர். தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டிகளில் விளையாடி உள்ளதாக தகவல். கான்பூர் நகரில் பழைய துணிகளை விற்பனை செய்யும் நோக்கில் கடை ஒன்றை அமைக்க அவர் திட்டமிட்டுள்ளார். அது தொடர்பாக உள்ளூரைச் சேர்ந்த கோவிந்த் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார்.

7 months ago
8







English (US) ·