காரைக்குடி அருகே அரசு பேருந்து, பால் வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு: 12 பேர் காயம்

7 months ago 8
ARTICLE AD BOX

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அரசுப் பேருந்து மற்றும் பால் வாகனம் ஆகியவை நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.

திருச்சியிலிருந்து ராமேசுவரத்துக்கு நேற்று அதிகாலை அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அதேபோல, ஈரோட்டிலிருந்து காரைக்குடிக்கு ரஸ்தா வழியாக பால் வாகனம் வந்துகொண்டிருந்தது. காரைக்குடி தேனாற்று பாலம் அருகே வந்தபோது, இந்த இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

Read Entire Article