ARTICLE AD BOX

காரைக்குடி: காரைக்குடி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.2.06 லட்சம் வழிப்பறி செய்த இருவரை 2 மணி நேரத்தில் போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் இந்திராநகரைச் சேர்ந்தவர் பாக்கியம் (55). இவர் நேற்று (மே 30) காலை அப்பகுதியில் உள்ள தேசிய வங்கியில் ரூ.2.06 லட்சம் எடுத்தார். தொடர்ந்து அருகேயுள்ள உறவினர் வீட்டுக்கு சென்று பேசி கொண்டிருந்தார்.மாலை அங்கிருந்து அவரது வீட்டுக்கு பாக்கியம் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த 2 பேர், பாக்கியத்திடம் இருந்து பணப்பையை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.

7 months ago
8







English (US) ·