கால்நடை மருந்து விற்பனையில் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி ரூ.22.60 லட்சம் மோசடி: இருவர் கைது

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: மேற்கு ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து கால்நடை மருந்துகளை வாங்கி விற்று அதிக லாபம் பெறலாம் எனக் கூறி தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.22.60 லட்சம் நூதன மோசடி செய்த தெலங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை சவுகார்பேட்டை, நாராயண முதலி தெருவில் வசிப்பவர் சுரேஷ் குமார் பி கவாட் (53). இவர், பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது செல்போனுக்கு அண்மையில் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ‘தனது பெயர் ஹென்றி மென்சா என்றும், தான் மேற்கு ஆப்ரிக்கா நாட்டிலிருந்து பேசுவதாகவும், தான் கால்நடைகளுக்கான பல்வேறு வியாதிகளுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கான எதிர்ப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருவதாகவும், இந்தியாவில் என்னுடைய நிறுவனத்தை நடத்த விரும்புவதாகவும், எனது நிறுவனத்தின் ஏஜெண்டாக உங்களை பணியமர்த்த விரும்புகிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

Read Entire Article