ARTICLE AD BOX

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “இந்திய அணி உடனான இறுதிப் போட்டியில் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இது மாதிரியான அழுத்தம் நிறைந்த போட்டிகளில் இதுவே மிகவும் முக்கியம் என கருதுகிறேன். சரிவில் இருந்து மீண்டு வந்து பெறுகின்ற வெற்றி அணிக்கு நம்பிக்கை தரும். கடந்த சில மாதங்களாக நாங்கள் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். இந்த அணிக்கு அந்த திறன் உள்ளது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் தங்களால் முடியும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளனர். அவர்கள் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவதை பெருமையாக உணர்கின்றனர்.

3 months ago
4







English (US) ·