ARTICLE AD BOX

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கிராமப் பகுதியில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனங்களில் 24 மணி நேரம் மது விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளி உள்வட்டத்துக்கு உட்பட்ட குப்பச்சிபாறை, சென்னசந்திரம் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
இக்கிராமங்களில் சிலர் இருசக்கர வாகனங்களில் மது விற்பனை செய்து வருவதாகவும், எந்த நேரத்திலும் மது கிடைக்கும் என்பதால் பலர் குடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் முடங்கி வருவதாகவும், இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

3 months ago
5







English (US) ·