ARTICLE AD BOX

கும்பகோணம்: கும்பகோணத்தில் கீரை வியாபாரி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனையும், பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து கும்பகோணம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே வலையபேட்டை மாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(55). கீரை வியாபாரி. இவரது மைத்துனர் மணியின் மகன்களான அபினேஷ், அஜய் ஆகியோர் 2020-ம் ஆண்டு மே மாதம் நண்பர் ஒருவர் வீட்டில் கேரம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த அதபகுதியைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் அருண்குமார்(36) மது போதையில் தகாத வார்த்தையில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அவரை அபினேஷ் கண்டித்து அங்கிருந்து அனுப்பிவிட்டார். சில நாள் கழித்து அபினேஷ் வீட்டுக்குச் சென்ற அருண்குமார், அங்கிருந்த அபினேஷ், அஜய் உள்ளிட்டவர்களை தாக்கியுள்ளார். மறுநாள் இரவு மீண்டும் அபினேஷ் வீட்டுக்கு சென்ற அருண்குமார் தரப்பினர் அங்கிருந்த அபினேஷ் தரப்பினரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

3 months ago
5







English (US) ·