குடியாத்தத்தில் 4 வயது குழந்தை காரில் கடத்தல் - 2 மணி நேரத்தில் மீட்ட காவல் துறை!

3 months ago 4
ARTICLE AD BOX

குடியாத்தத்தில் தந்தை மீது மிளகாய் பொடியை தூவி 4 வயது குழந்தையை மர்ம நபர்கள் காரில் கடத்தினர். போலீஸார் 7 தனிப்படைகளை அமைத்து தேடுதல் பணியை துரிதப்படுத்திய நிலையில் மாதனூர் அருகே குழந்தையை மர்ம நபர்கள் விட்டுச் சென்றனர். பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை பவளக்கார தெருவைச் சேர்ந்தவர் வேணு (33). இவரது மனைவி ஜனனி. இவர்களின் மகன் யோகேஷ் (4). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யோகேஷ் எல்.கே.ஜி படித்து வருகிறார். வேணு, வீட்டில் இருந்தபடி ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

Read Entire Article