குன்றத்தூரில் பெண்களை தாக்கி நகை கொள்ளை: வட மாநில நபருக்கு போலீஸ் வலை

4 months ago 5
ARTICLE AD BOX

குன்றத்தூர்: குன்றத்தூர் காந்தி சாலை, மணிகண்டன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனது தாய் வள்ளியம்மாள் (88) மற்றும் மனைவி அபிதா (59) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

ராஜேந்திரன் பொழிச்சலூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு (ஆக 31-ம் தேதி) வேலை நிமித்தமாக ராஜேந்திரன் திருமண மண்டபத்திலேயே தங்கிய நிலையில், வீட்டில் அவரது மனைவி மற்றும் தாய் மட்டும் தனியாக இருந்துள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர், நேற்றிரவு 10.30 மணியளவில் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்றுள்ளார்.

Read Entire Article