ARTICLE AD BOX

மும்பை: குளோபல் செஸ் லீக்கின் 3-வது சீசன் போட்டி வரும் டிசம்பர் 13 முதல் 24 வரை மும்பையில் நடைபெறுகிறது. இந்தத் தொடர் இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. 12 நாட்கள் நடைபெறும் இந்த போட்டி இரட்டை ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணியும் 10 ஆட்டங்களில் விளையாடும். 6 போர்டுகளில் சிறப்பாக செயல்படும் அணி வெற்றி பெறும்.
இந்நிலையில் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியில் இடம் பெறும் வீரர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் பிபிஜி அலாஸ்கன் நைட்ஸ் அணிக்காக உலக சாம்பியனான டி.குகேஷும், உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள அர்ஜுன் எரிகைசியும் தேர்வானார்கள்.

3 months ago
5







English (US) ·