குவாரி விபத்து தொடர்பாக 3 பேர் கைது: உரிமையாளர் தலைமறைவு

7 months ago 8
ARTICLE AD BOX

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மூவரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான குவாரி உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் தனியார் கல் குவாரி உள்ளது. இங்கு மே 20-ம் தேதி 400 அடி பள்ளத்தில் பாறை சரிந்து விழுந்ததில் பொக்லைன் ஓட்டுநர் உட்பட 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து குவாரி உரிமத்தை தற்காலிகமாக மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் ரத்து செய்தார்.

Read Entire Article