ARTICLE AD BOX

நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி பிரிவு விவகாரத்தில் தன் மீது தொடுக்கப்படும் ஆன்லைன் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார் பாடகி கெனிஷா.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அனைத்து வசவாளர்களுக்கும்: கெனிஷாவின் வழக்கறிஞர் குழுவில் இருந்து” என்று தலைப்பிட்டு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பாடகி கெனிஷா ஆன்லைனில் தொடர்ச்சியாக கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை மிரட்டல், ஆபாச குறுஞ்செய்திகள் உள்ளிட்ட தாக்குதல்களால் குறிவைக்கப்படுவதால் அவர் மனரீதியான அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாகவும், இதனால் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

7 months ago
8





English (US) ·