‘கேப்டனும் பயிற்சியாளரும் நம்மை நம்பினால் பாதி வேலை முடிந்து விடும்’ - வைஷாக் விஜய்குமார்

9 months ago 8
ARTICLE AD BOX

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பலமான தாக்கம் ஏற்படுத்தினார் இம்பேக்ட் வீரராக களம் கண்ட பஞ்சாப் கிங்ஸ் பவுலர் வைஷாக் விஜய்குமார். 3 ஓவர்களில் 28 ரன்களை அவர் கொடுத்திருந்தார். விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. இருந்தும் அவரது பந்து வீச்சு தான் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உதவியது.

பேட்ஸ்மேன்கள் பந்தை பவுண்டரிக்கு விளாச முடியாத வகையில் லைன் மற்றும் லெந்த்தை பின்பற்றினார் வைஷாக். அதுவும் ரூதர்போர்டுக்கு ஆஃப் திசையில் வெளியே செல்லும் வகையில் வீசி இருந்தார். முதல் இரண்டு ஓவர்களில் மொத்தம் 10 ரன்கள் கொடுத்தார். கடைசி ஓவரில் 18 ரன்கள் கொடுத்திருந்தார்.

Read Entire Article