ARTICLE AD BOX

சென்னை: கேரள மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சஜீவன் அத்துல் (31). இவர் மீது மோசடி,கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளில் திருச்சூர் காவல் துறையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கு பதிவானது.
அவர் போலீசில் சிக்காமல் வெளிநாடு தப்பி சென்று தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த போலீசா, அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் சென்னைக்கு வந்தது.

7 months ago
8







English (US) ·