ARTICLE AD BOX

பொள்ளாச்சி: மனநலம் குன்றிய இளைஞர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் உடமைகளை கையாடல் செய்த மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் பணம் பெற்ற மேட்டுப்பாளையம் உதவி ஆய்வாளர் மகாராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் செயல்பட்டு வந்த மனநல காப்பகத்தில் 22 வயது இளைஞர் வருண் காந்த் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகளான கவிதா அவரது கணவர் லட்சுமணன் இரண்டு மகள்களான ஸ்ரேயா, சுருதி மற்றும் மற்றொரு பங்குதாரரான சாஜி ஆகிய ஐந்து பேர் தலைமறைவாகினர்.

7 months ago
8







English (US) ·