ARTICLE AD BOX

சென்னை: கொளத்தூரில் 17 வயது சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொளத்தூர் முருகன் நகர் 2-வது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவர், சென்னை மாநகர பேருந்து நடத்துநராக பணிபுரிகிறார். இவரது மகன் ஹர்ஷ்வர்தன் (17). 10-ம் வகுப்பு வரை படித்திருக்கும் ஹர்ஷ்வர்தன், கொளத்தூர், விவி நகரில் ஒரு மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கும், கொளத்தூரைச் சேர்ந்த சிறுவர்கள் சிலருக்கும் முன்விரோதம் இருந்தது.
இதில், ஹர்ஷ்வர்தன் மொபெட்டில் வேகமாக சென்றது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், நாளடைவில் இரு தரப்பினருக்கும் இடையே பகையாக மாறியது. இந்நிலையில், ஹர்ஷ்வர்தன், கடந்த 18-ம் தேதி தனது நண்பருடன் ஒரு மொபெட்டில் கொளத்தூர், பஜனை கோயில் தெரு வழியாக சென்றுள்ளார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த எதிர் தரப்பினருக்கும், ஹர்ஷ்வர்தன் தரப்புக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு முற்றியது.

3 months ago
5







English (US) ·