ARTICLE AD BOX

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின்போது வெளிநாடுகளில் இருந்து 7 முறை செல்போன் மூலம் கனகராஜ் உடன் பேசிய தகவல் பரிமாற்ற விபரங்களை பெற சிபிசிஐடி போலீஸார் சேலம் நீதிமன்றத்தில் இருந்து சிபிஐ உதவியுடன் இன்டர்போல் போலீஸாருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பினர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ம் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

10 months ago
9







English (US) ·