ARTICLE AD BOX

சென்னை: கோட்டூர்புரத்தில் ரவுடி அவரது நண்பருடன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை தொடர்பாக 7 பேரை கைது செய்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகர் ‘யு’ பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் அருண் (25). ரவுடியான இவர் மீது 6 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருடைய காதலி சாயின்ஷா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கேளம்பாக்கம் பகுதியில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கோட்டூர்புரம் சித்ரா நகர் ‘வி’ பிளாக் பகுதியை சேர்ந்த சுக்கு காபி சுரேஷ் என்கிற சுரேஷ்(25) கைது செய்யப்பட்டார். சுக்குகாபி சுரேஷ் மீதும் 17 குற்ற வழக்குகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

9 months ago
9







English (US) ·