கோட்டூர்புரம் இரட்டை கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

9 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: கோட்டூர்புரத்தில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர், நாவலூர் குடியிருப்பில் வசித்து வந்த சுரேஷ் (24), மற்றும் கோட்டூர்புரம், சித்ரா நகரில் வசித்து வந்த அருண் (25) ஆகிய இருவரும் கடந்த 16-ம் தேதி கோட்டூர்புரம், சித்ரா நகர் வீட்டுவசதி வாரியம், நாகவள்ளி அம்மன் கோயில் அருகில் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.முதல் கட்டமாக கொலை தொடர்பாக செங்கல் பட்டைச் சேர்ந்த சுரேஷ் என்ற சுக்குகாபி சுரேஷ் (26), கோட்டூர்புரம் கரண் என்ற மனோஜ் (21), படபழனி ராசுக்குட்டி என்ற செல்வகணபதி (19), ஜீவன் (19) ஆகிய 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

Read Entire Article