கோயம்பேட்டில் அரசு பேருந்தை திருடி ஓட்டிச் சென்ற ஒடிசா இளைஞர்: ஆந்திராவில் பிடிபட்டார்

3 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: கோ​யம்​பேட்​டில் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்த அரசு பேருந்​தை, திருடி ஓட்​டிச்​சென்ற ஒடிசா இளைஞரை ஆந்​தி​ரா​வில் வாகன சோதனை​யின்​போது போலீ​ஸார் கைது செய்து பேருந்தை மீட்​டனர். கோயம்​பேடு பணிமனை வாகன நிறுத்​தும் இடத்​தில் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்த, திருப்​பதி செல்​லும் தமிழக அரசு பேருந்து ஒன்று நேற்று முன்​தினம் காலை திருடு​போனது. அதிர்ச்சி அடைந்த கோயம்​பேடு பேருந்து பணிமனை கிளை மேலா​ளர் ராம்​சிங், சிஎம்​பிடி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன்​படி, போலீ​ஸார் வழக்​கு பதிந்து அப்​பகு​தி​யில் பொருத்​தப்​பட்​டிருந்த சிசிடிவி கேமரா காட்​சிகளை ஆய்வு செய்​தனர். இதில் இளைஞர் ஒரு​வர் பேருந்தை திருடி, ஆந்​திரா நோக்கி ஓட்​டிச் சென்​றது தெரிய​வந்​தது. இதையடுத்​து, பேருந்து சென்ற வழித்​தடங்​களில் உள்ள கேமரா காட்​சிகள், திருடப்​பட்ட அரசு பேருந்​தில் உள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் கண்​காணித்து பின் தொடர்ந்​தனர். அப்​போது ஆந்​திர மாநில போலீ​ஸார், நெல்​லூர் பகு​தி​யில் வாகன சோதனை​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

Read Entire Article