கோவை அருகே வீட்டில் தீ விபத்து: சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு  

6 months ago 7
ARTICLE AD BOX

கோவை: கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ள நீலிக்கோணாம்பாளையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டின் முதல் தளத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த துணிகள் எரிந்து நாசமாகின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ள நீலிக்கோணாம்பாளையம் பிரதான பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள வீதியைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். மாணிக்கராஜ் பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். தவிர, பனியன் உள்ளிட்ட துணிகளை வாங்கி வீட்டில் வைத்து வியாபாரமும் செய்து வருகிறார்.

Read Entire Article