ARTICLE AD BOX

கோவை: கோவை கார் வெடிப்பு வழக்கில் 5 பேர் மீது 4-வது கூடுதல் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர். இவர்கள், கரோனா காலத்தில் போலிச்சான்றிதழ் தயாரித்ததன் மூலம் கிடைத்த பணத்தை, கோவை கார் வெடிப்புச் சம்பவத்துக்கு தேவையான வெடிபொருட்கள் வாங்க பயன்படுத்தியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த, அதேப் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (28) என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் தாக்குதல் நடத்தி, உயிரிழப்பை ஏற்படுத்த இக்கும்பல் திட்டமிட்டது தெரியவந்தது.

8 months ago
8







English (US) ·