ARTICLE AD BOX

கோவை: கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் தங்கள் காவல் எல்லைக்குட்பட்ட வஉசி பூங்கா பகுதியில் நேற்று நள்ளிரவு வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது நள்ளிரவு 1.30 மணியளவில் பூங்கா வளாகத்தில் உள்ள ஒரு இடத்தில் இருந்த மரத்தில் ஒரு ஆண் சடலம் இருந்தது. ஆண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து ரோந்து போலீஸார் ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

9 months ago
9







English (US) ·