ARTICLE AD BOX

கோவை: கோவை பேரூர் அருகே சாலையோரம் இருந்த மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில், கல்லூரி மாணவர் உட்பட நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் பேரூர் அருகேயுள்ள, பேரூர் செட்டிபாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு (அக்.24) ஒரு சொகுசு கார் வேகமாக வந்து கொண்டு இருந்தது. அந்தக் காரில் 5 பேர் இருந்தனர். அங்குள்ள ஒரு வளைவில் கார் திரும்ப முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் காரின் பெரும்பகுதி நொறுங்கியது.

2 months ago
4







English (US) ·