ARTICLE AD BOX

கோவை: கோவையில் ரயில் தண்டவாளத்தில் கல் வைத்த வழக்கில், கல்லூரி மாணவர்கள் 5 பேரை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (மே 7) அதிகாலை 4.15 மணிக்கு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரயில், கோவை ஆவாரம்பாளையம் ரயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது, அங்குள்ள தண்டவாளத்தில் 2 அடி நீளம், ஒரு அடி அகலம் கொண்ட கான்கிரீட் கல் வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து ரயில் ஏறியதும், அங்கு வைக்கப்பட்டிருந்த கல் சுக்குநூறாக நொறுங்கியது.

7 months ago
8







English (US) ·