கோவையில் ஆண் நண்பரை தாக்கிவிட்டு கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - நடந்தது என்ன?

1 month ago 3
ARTICLE AD BOX

கோவை: கோவையில் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, மூவரை பிடிக்க 7 தனிப்படை அமைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படிக்கிறார்.

தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில், கோவையில் ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்திவரும் 25 வயதான இளைஞருடன் சமூக வலைதளம் வாயிலாக மாணவிக்கு அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து, வெளியே சென்று வந்துள்ளனர். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், மாணவியும், இளைஞரும் பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு, பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி, உள்ளே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

Read Entire Article