ARTICLE AD BOX

கோவை: கோவையில் கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை கும்பலைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 8 .45 கிலோ கஞ்சா, 10 கிராம் மெத்தபெட்டமைன், ஒரு கார், ஒரு ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனம், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கோவை மதுக்கரை வழியாக ஒரு கும்பல், விற்பனைக்காக கஞ்சா கடத்தி வருவதாக மதுக்கரை போலீஸாருக்கு இன்று (மார்ச் 1) ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், மதுக்கரை போலீஸார், பாலத்துறை சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஒரு கார், ஒரு ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை சந்தேகத்தின் பேரில் போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

9 months ago
9







English (US) ·